மூடனின் மறுதலிப்பு
இராகத் தலைவனுக்கு. தாவீதின் சங்கீதம்.
தேவன் இல்லை என்று மூடன் சொல்லுவது கோட்பாட்டு ரீதியானதாக அல்ல, நடைமுறை ரீதியானதாகக் கருதப்படுகிறது. உணர்வுள்ளவன் யாராவது உண்டோ என்று நம்முடைய பிதா மனுஷர் எல்லாரையும் ஆராய்ந்து, ஒருவனையும் காணவில்லை. அவருடைய ஜனத்தை விழுங்குகிறவர்களைத் திடீர் திகில் பிடிக்கிறது; சீயோனிலிருந்து இரட்சிப்பு வரவேண்டும் என்ற ஏக்கத்தோடு சங்கீதம் முடிகிறது.
14 1“தேவன் இல்லை” என்று மூடன் தன் இருதயத்தில் சொல்லுகிறான். அவர்கள் கெட்டுப்போனார்கள், அவர்களுடைய செய்கைகள் அருவருப்பானவை; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2உணர்வுள்ளவன் யாரேனும் உண்டோ, தம்மைத் தேடுகிறவன் யாரேனும் உண்டோ என்று பார்க்கும்படி, எங்கள் பிதா வானத்திலிருந்து மனுப்புத்திரர்மேல் நோக்கிப்பார்க்கிறார். 3எல்லாரும் வழிவிலகிப்போனார்கள்; அனைவரும் ஒருமிக்கக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4அப்பம் தின்பதுபோல் என் ஜனத்தை விழுங்குகிற இந்த அக்கிரமக்காரர் அனைவருக்கும் ஒன்றும் தெரியாதோ? அவர்கள் எங்கள் பிதாவை ஒருபோதும் தொழுதுகொள்வதில்லையே. 5அங்கே அவர்கள் மகா பயத்தினால் திடுக்கிட்டார்கள், ஏனெனில் எங்கள் பிதா நீதிமான்களின் சந்ததியோடு இருக்கிறார். 6அக்கிரமக்காரரே, நீங்கள் சிறுமையானவனுடைய திட்டங்களைப் பாழாக்கப் பார்க்கிறீர்கள், ஆனால் எங்கள் பிதா அவனுக்கு அடைக்கலமாயிருக்கிறார்.
7இஸ்ரவேலின் இரட்சிப்பு சீயோனிலிருந்து வந்தால் எவ்வளவு நலம்! எங்கள் பிதா தம் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு களிகூரட்டும், இஸ்ரவேல் மகிழ்ந்திடட்டும்.