நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை
பாடகர் தலைவனுக்கு; மகலாத் என்னும் இசைமுறையின்படி. தாவீதின் ஞானப் பாடல்.
14-ஆம் சங்கீதத்தோடு ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. உணர்வுள்ள ஒருவனாவது உண்டோ என்று நமது பிதா மனுக்குலம் முழுவதையும் நோக்கிப் பார்க்கிறார்; ஒருவனையும் காணவில்லை. அவருடைய ஜனங்களை விழுங்குகிறவர்கள் பயப்படக் காரணமில்லாத இடத்தில் திகிலால் பிடிக்கப்படுகிறார்கள். சீயோனிலிருந்து வரும் இரட்சிப்புக்கான ஏக்கத்தோடு அது முடிகிறது.
53 1மூடன் தன் இருதயத்திலே, “தேவன் இல்லை” என்று சொல்லுகிறான். அவர்கள் கெட்டுப்போய், அருவருப்பான அநியாயத்தைச் செய்கிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2உணர்வுள்ளவன் எவனாகிலும், தம்மைத் தேடுகிறவன் எவனாகிலும் உண்டோ என்று பார்க்கும்படி, எங்கள் பிதா பரலோகத்திலிருந்து மனுஷர் அனைவரையும் நோக்கிப் பார்த்தார். 3எல்லாரும் வழிதப்பிப் போனார்கள்; அனைவரும் ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4அக்கிரமக்காரருக்கு அறிவில்லையோ? அப்பம் தின்பதுபோல் என் ஜனத்தைத் தின்கிறார்களே, எங்கள் பிதாவைத் தொழுதுகொள்ளாமலும் இருக்கிறார்களே. 5பயப்படுவதற்கு ஒன்றுமில்லாத இடத்தில், அங்கே அவர்கள் மிகவும் திடுக்கிட்டுப் பயந்தார்கள்; ஏனெனில் உனக்கு விரோதமாய் முகாமிட்டவனுடைய எலும்புகளை எங்கள் பிதா சிதறடித்தார்; நீ அவர்களை வெட்கப்படுத்தினாய், ஏனெனில் எங்கள் பிதா அவர்களைப் புறக்கணித்தார்.
6இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு சீயோனிலிருந்து வந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! எங்கள் பிதா தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு களிகூரட்டும், இஸ்ரவேல் மகிழட்டும்.