துன்மார்க்க அதிபதிகள்
பாடகர் தலைவனுக்கு: “அழிக்காதே” என்னும் இராகத்தில் பாடப்பட வேண்டியது. தாவீதின் பொன்மயமான பாடல்.
நியாயாசனத்திலிருந்து கொடுமையைப் பங்கிட்டுக் கொடுக்கும் நியாயாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு. அவர்கள் விஷமுள்ளவர்கள் என்றும், மகுடி ஊதுகிறவனின் இசையைக் கேட்க மறுக்கும் செவிட்டு நாகத்தைப்போன்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய விஷப்பற்கள் உடைக்கப்பட வேண்டும் என்று ஜெபம் கேட்கிறது; அப்பொழுது நமது பிதா பூமியை நியாயந்தீர்க்கிறார் என்று ஜனங்கள் வெளிப்படையாகச் சொல்லுவார்கள்.
58 1அதிபதிகளே, நீங்கள் மெய்யாகவே நீதியானதைத் தீர்மானிக்கிறீர்களா? மனுபுத்திரரை நேர்மையோடு நியாயந்தீர்க்கிறீர்களா? a a v1 “அழிக்காதே” என்பது இந்தப் பாடல் பாடப்பட்ட இராகத்தின் பெயராகும். 2இல்லை, உங்கள் இருதயங்களில் நீங்கள் அநியாயங்களைச் சிந்திக்கிறீர்கள்; உங்கள் கைகள் தேசமெங்கும் கொடுமையைப் பகிர்ந்தளிக்கின்றன. 3துன்மார்க்கர் கருப்பையிலிருந்தே அந்நியராயிருக்கிறார்கள்; பிறந்ததுமுதல் பொய் பேசி வழிதப்பிப் போகிறார்கள். 4அவர்களுடைய விஷம் பாம்பின் விஷம்போலிருக்கிறது, தன் காதை அடைத்துக்கொள்ளும் செவிடான நாகப்பாம்பைப்போலிருக்கிறது, 5மந்திரவாதிகளின் சத்தத்தையும், தந்திரமாய் மந்திரிக்கிறவனின் குரலையும் அது கேளாதபடிக்கே அப்படிச் செய்கிறது. 6எங்கள் பிதாவே, அவர்கள் வாய்களிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; எங்கள் பிதாவே, பாலசிங்கங்களின் கோரைப்பற்களைப் பிடுங்கிப்போடும்! 7ஓடிப்போகிற தண்ணீரைப்போல் அவர்கள் மறைந்துபோகட்டும்; எங்கள் பிதா தம் அம்புகளைத் தொடுக்கும்போது, அவர்கள் அறுப்புண்டுபோகட்டும். 8ஊர்ந்து செல்லும்போதே கரைந்துபோகும் நத்தையைப்போலவும், சூரியனை ஒருபோதும் காணாத செத்துப்பிறந்த குழந்தையைப்போலவும் அவர்கள் ஆகட்டும். 9உங்கள் பானைகள் முள்ளின் வெப்பத்தை உணர்வதற்குமுன்பே, பசுமையாயிருந்தாலும் எரிந்துகொண்டிருந்தாலும், அவர் அவைகளை அடித்துக்கொண்டுபோய்விடுவார். 10நீதிமான் நீதி நிறைவேற்றப்படுவதைக் காணும்போது மகிழ்ச்சியடைவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கருடைய இரத்தத்தில் கழுவுவான். 11அப்பொழுது மனிதர்: “மெய்யாகவே நீதிமானுக்குப் பலனுண்டு; மெய்யாகவே எங்கள் பிதா பூமியை நியாயந்தீர்க்கிறவராயிருக்கிறார்” என்று சொல்லுவார்கள்.