ஏழுதரம் புடமிடப்பட்ட வெள்ளி
இராகத் தலைவனுக்கு; ஷெமினீத் என்னும் இசைமுறையில். தாவீதின் சங்கீதம்.
உண்மையுள்ளவர்கள் அற்றுப்போனார்கள்; ஒவ்வொருவரும் இருமனதோடு முகஸ்துதி பேசுகிறார்கள். பெருமைபேசும் நாவுகள் அறுப்புண்டுபோகும்படி சங்கீதக்காரன் கேட்கிறான்; பதிலும் கிடைக்கிறது: சிறுமையானவர்கள் தவிப்பதால், நான் எழுந்திருப்பேன் என்று நம்முடைய பிதா சொல்லுகிறார். அவருடைய வார்த்தைகள் ஏழுதரம் புடமிடப்பட்ட வெள்ளி.
12 1எங்கள் பிதாவே, உதவிசெய்யும்; ஏனெனில் பக்தியுள்ளவர்கள் அற்றுப்போனார்கள்; உண்மையுள்ளவர்கள் மனுஷகுமாரரின் மத்தியிலிருந்து மறைந்துபோனார்கள். 2ஒவ்வொருவனும் தன் அயலானிடத்தில் பொய் பேசுகிறான்; இச்சகம் பேசும் உதடுகளாலும் இருமனதோடும் அவர்கள் பேசுகிறார்கள். 3இச்சகம் பேசும் எல்லா உதடுகளையும், பெருமையானவற்றைப் பேசும் ஒவ்வொரு நாவையும் எங்கள் பிதா அறுத்துப்போடுவாராக, 4“எங்கள் நாவினால் மேற்கொள்வோம்; எங்கள் உதடுகள் எங்களுடையவை—எங்கள்மேல் ஆண்டவன் யார்?” என்று சொல்லுகிறவர்களையே.
5“ஏழைகள் கொள்ளையிடப்படுகிறபடியாலும், எளியவர்கள் தவிக்கிறபடியாலும், நான் இப்பொழுது எழுந்திருப்பேன்,” என்று எங்கள் பிதா சொல்லுகிறார். “அதற்கு ஏங்குகிறவனை நான் பாதுகாப்பில் சேர்ப்பேன்.”
6எங்கள் பிதாவின் வார்த்தைகள் சுத்தமான வார்த்தைகள்; மண் உலையில் காய்ச்சி, ஏழுதரம் புடமிடப்பட்ட வெள்ளிபோலிருக்கிறது. 7எங்கள் பிதாவே, நீரே எளியவர்களைப் பாதுகாப்பாய்க் காப்பீர்; இந்தச் சந்ததியாரிடமிருந்து என்றென்றும் எங்களைத் தற்காப்பீர். 8மனுஷகுமாரரின் மத்தியில் கீழ்மை உயர்த்தப்படும்போது, துன்மார்க்கர் எப்பக்கத்திலும் சுற்றித்திரிகிறார்கள்.